உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டு மாடு தாக்கி விவசாயி காயம்

காட்டு மாடு தாக்கி விவசாயி காயம்

போடி : போடி முதல்வர் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் 56. இவர் நேற்று பெரியாற்று கோம்பை புலம், சின்னமொடக்கு பகுதியில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக தோட்டத்திற்குள் வந்த காட்டு மாடு வேல்முருகனை தாக்கியது. நெற்றி பகுதியில் பலத்த காயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குரங்கணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ