உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

தேவதானப்பட்டி: கொடைக்கானல் வில்பட்டி அருகே அட்டுவம்பட்டி கிரஸ் பகுதியைச் சேர்ந்தவர் தவுபிக்அலி 48. பில்டிங் காண்ட்ரக்டர். பிப்.,17 இரவு கொடைக்கானலிருந்து மதுரை செல்வதாக காரில் கிளம்பியுள்ளார். தேவதானப்பட்டியில் தங்கை நிஷா வீட்டில் தங்கியுள்ளார். மறுநாள் பிப்.,18ல் காலை 8:00 மணிக்கு மதுரைக்கு கிளப்பியுள்ளார். காட்ரோடு பகுதியில் பெட்ரோல் பங்கில் காலை 11:00 மணிக்கு காரை நிறுத்தியுள்ளார். கார் சாவியை பங்க் மேலாளரிடம் கொடுத்து விட்டு தனது மகன் வந்தால் கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் இரு தினங்களுக்கு பிறகு எடுத்துக்கொள்வதாக கூறி விட்டு சென்றார். இது நாள் வரை வீட்டிற்குவரவில்லை. எவ்வித தகவலும் இல்லை. மனைவி யாஸ்மின் பாத்திமா புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் தேடிவருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை