உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1350 கன அடியாக அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1350 கன அடியாக அதிகரிப்பு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1350 கன அடியாக அதிகரித்தது.முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1350 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் உயர்ந்து 117.55 அடியானது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக 100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. பெரியாறில் 78.4 மி.மீ., தேக்கடியில் 31.8 மி.மீ., மழை பதிவானது. நீர் இருப்பு 2186 மில்லியன் கன அடியாகும். மழை அதிகரிப்பதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை