உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழில் பெயர் இல்லாத கடைகளுக்கு அபராதம்

தமிழில் பெயர் இல்லாத கடைகளுக்கு அபராதம்

தேனி : மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு விதிகளின் படி தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் பெயர் பலகைகளில் 50 சதவீத அளவில் தமிழ் எழுத்துக்கள் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துக்களை விட அளவில் சிறிதாக பிற மொழியில் பெயர்கள் இடம்பெற வேண்டும்.இந்த விதிகளை பின்பற்ற கடைகள் பற்றி தமிழ்வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்த உள்ளோம்.விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை