உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடைப்பந்து அணி தேர்வு ஜூலை 20ல் நடக்கிறது

கூடைப்பந்து அணி தேர்வு ஜூலை 20ல் நடக்கிறது

தேனி : தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான போட்டி நடத்தப்பட உள்ளது. தேனி மாவட்ட அணியில் விளையாட விரும்பும் 16 வயதிற்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு ஜூலை 20ல் மாவட்ட விளையாட்டு அரங்க கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது. பங்கேற்கும் வீரர்கள் 2008 ஜன.,க்குபின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். உரிய சான்றிதழ்களுடன் காலை 7:00 மணிக்கு வர வேண்டும் என, தேனி மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் அஸ்வின்நந்தா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 94421 51345 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ