உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

பெட்ரோல் குண்டு வீசி கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு

போடி: போடி கிருஷ்ணா நகரில் வசிப்பவர் சுரேஷ் 42. இவரது மைத்துனர் பிரதீப் முத்தையன் செட்டி பட்டியில் வசித்து வருகிறார். பிரதீப் தந்தைக்கு சொந்தமான முத்தையன் செட்டிபட்டியில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை சுரேஷ் விலைக்கு வாங்கி உள்ளார். இதில் பிரதீப் பங்கு கேட்டு பிரச்னை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று பிரதீப் அவருடன் அடையாளம் தெரியாத 2 நபர்கள் சேர்ந்து சுரேஷ் வீட்டில் இருந்த போது தகாத வார்த்தை பேசி, கையில் வைத்து இருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போடி தாலுகா போலீசார் பிரதீப் உட்பட 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ