மேலும் செய்திகள்
ஆதியூரில் சிறுத்தை நடமாட்டம்; அச்சத்தில் மக்கள்!
05-Apr-2025
போடி: தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி கல்லாற்று ஓடைப் பகுதியில் துப்பாக்கியால் சருகு மான்களை சுட்டு வேட்டையாடிய கூலித்தொழிலாளியை கைது செய்த வனத்துறையினர், தப்பியோடிய ராணுவ வீரரை தேடி வருகின்றனர். போடி வனத்துறையினர் நேற்று முன்தினம் குரங்கணி பகுதியில் இரவு ரோந்து சென்றனர். கல்லாற்று ஓடைப் பகுதியில் வனத்துறையினரை பார்த்ததும், குரங்கணி நரிப்பட்டி ராணுவ வீரர் பாக்யராஜ், 40, கூலித் தொழிலாளி கண்ணன், 55, ஆகியோர் தப்பி ஓடினர். கண்ணனை வனத்துறையினர் கைது செய்தனர். ராணுவ வீரர் தப்பியோடி விட்டார்.விசாரணையில், கல்லாற்று ஓடைப் பகுதியில் இரண்டு சருகு மான்களை, அனுமதி பெறாத துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரிந்தது. மான்களின் உடல்கள், ராணுவ வீரர் விட்டுச் சென்ற கார், தோட்டாக்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவரை தேடி வருகின்றனர்.
05-Apr-2025