உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்விக்கடன் முகாமில் ரூ.2.52 கோடி கடனுதவி

கல்விக்கடன் முகாமில் ரூ.2.52 கோடி கடனுதவி

தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் அனைத்து வங்கிகள் சார்பில் கல்விக்கடன் முகாம் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். முகாமில் 66 மாணவர்களுக்கு ரூ.2.52 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டது. மாணவர்கள் கல்விக்கடனுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையத்தில் விண்ணப்பிப்பது, வங்கி கடன் திட்டங்கள் விளக்கப்பட்டன. முகாமில் சமூக பாதுகாப்புத்திட்ட தனி சப்கலெக்டர் முரளி, அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் இதுவரை 202 மாணவர்களுக்கு ரூ.8.88 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி