உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சி.ஐ.டி.யு., சார்பில் மறியல்; 82 பேர் கைது

சி.ஐ.டி.யு., சார்பில் மறியல்; 82 பேர் கைது

தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் சி.ஐ.டி.யூ.,சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் ஜெயபாண்டி தலைமை வகித்தார்.போக்குவரத்து தொழிற்சங்க மண்டலச் செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ராஜப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் செய்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த 82 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை