உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டை கடக்க முயன்றவர் மீது கார் மோதி பலி

ரோட்டை கடக்க முயன்றவர் மீது கார் மோதி பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 35. இவரது மனைவி அபிராமி 33. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளது. முத்துப்பாண்டி மட்டையில் இருந்து தேங்காய் உறிக்கும் பணியாளர். தேனி- திண்டுக்கல் பைபாஸ் ரோடு புல்லக்காபட்டி பிரிவில் நடந்து ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பெரியகுளத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் முத்துப்பாண்டி மீது மோதியது. பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்து ஏற்படுத்திய பெரியகுளம் முத்துராஜா தெருவைச் சேர்ந்த டிரைவர் ஆகாஷிடம் 30,தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ