உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிரசவிக்க துவங்கிய வரையாடுகள் இரவிகுளம் பூங்கா பிப்.,1ல் மூட வாய்ப்பு

பிரசவிக்க துவங்கிய வரையாடுகள் இரவிகுளம் பூங்கா பிப்.,1ல் மூட வாய்ப்பு

மூணாறு: மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுள் பிரசவிக்க துவங்கியதால் பிப்., ஒன்றில் பூங்கா அடைக்க வாய்ப்புள்ளது.அங்கு அபூர்வ இன வரையாடு ஏராளம் உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை கடும் கட்டுப்பாடுகளுடன் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை துவங்கியதும் ஜூன், ஜூலையில் மேக மூட்டத்துடன் பெய்யும் சாரல் மழையின்போது வரையாடுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அவற்றின் பிரவச காலம் பிப்., துவங்கி மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது ராஜமலைக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படும்.வரையாடுகளின் பிரசவம் துவங்கும் முன்பு ஜனவரியில் வனக்காவலர்கள் அவற்றை கண்காணிப்பது வழக்கம். அவ்வாறு கண்காணிக்கப்பட்டதில் தற்போது பத்துக்கும் மேற்பட்ட குட்டிகள் பிறந்ததாக தெரியவந்தது. புதிதாக பிறந்த குட்டிகள் ராஜமலையில் தாயுடன் வலம் வருகின்றன.அவற்றை பயணிகள் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.வரையாடுகளின் பிரசவம் துவங்கியதால் வழக்கம் போல் பிப்., ஒன்றில் பூங்கா அடைக்க வாய்ப்புள்ளது.கடந்தாண்டு இரவிகுளம் தேசிய பூங்காவில் புதிதாக பிறந்த 128 குட்டிகள் உள்பட 803 வரையாடுகள் உள்ளதாக வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை