உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 35 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

35 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

சின்னமனூர்: சின்னமனூரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டில் போலீசார் ரோந்து சென்ற போது டூவீலரில் வந்த 3 பேர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் டூ வீலரில் வைத்திருந்த பையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 35 கிலோ 611 கிராம் இருந்தததை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ௹.46,720. போலீஸ் விசாரணையில் புகையி லையை விற்பனைக்காக கொண்டு சென்ற சின்னமனூர் முனீஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த முத்துராஜா 34, பாலமுருகன் 39, தலையாரி ராமசாமி தெரு முத்துமணி 60, என தெரிந்தது. சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை