உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

நகை அடகு கடை உரிமையாளர் மீது வழக்கு

தேனி: அல்லிநகரம் பொம்மையக் கவுண்டன்பட்டி பேபி 60. இவர் அப்பகுதியில் உள்ள கோல்டு லோன் நகை அடகு கடையில் 2023 மார்ச் 27 ல் 2 பவுன் தங்க நகையை ரூ.48 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் நகையை திருப்ப, நகை அடகு கடைக்கு சென்ற போது, கடந்த 2 ஆண்டுகளாக நகை கடையை பூட்டிவிட்டு, உரிமையாளர்தங்கராஜ்தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.அதிர்ச்சி அடைந்த பேபி, நகையை மீட்டுத்தருமாறு அல்லிநகரம்போலீசில்புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான நகை அடகுக்கடை உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை