தடுப்பு சுவர் சேதம் ஒருவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சத்தியேந்திரன். முருகமலை ஓடை கரையில் நீர் வளத்துறைக்கு சொந்தமான ரூ.1 லட்சம் மதிப்பிலான அரசு தடுப்புச்சுவரை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் கமலக்கண்ணன் புகாரில், ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் விசாரணை செய்து வருகிறார்.