குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு
தேனி: தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் தேனியில் நடந்தது. திருச்சி மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் திவ்யநாதன் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி பரமேஸ்வரி, திண்டுக்கல் தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகழேந்தி, திண்டுக்கல் தொழிலாளர் நல ஆணையர் சுப்பிரமணியன், குழந்தைகள் நலக்குழுத்தலைவர் வனஜா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் உமாதேவி,சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் சீமராஜ், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழித்தல் பற்றிய விழிப்புணர்வு, ஆலோசனை வழங்கப் பட்டது.