உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பதுக்கிய தம்பதியர் கைது

கஞ்சா பதுக்கிய தம்பதியர் கைது

போடி: குப்பிநாயக்கன்பட்டி போடிமெட்டு பாதையில் வசிப்பவர் செல்வம் 46.இவரது மனைவி ஜமுனாராணி 40. இருவரும் குண்டாலீஸ்வரி கோயில் அருகே மஞ்சள் பையுடன் நின்று இருந்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் இருவரிடமும் சோதனை மேற்கொண்டனர். இருவரது பையிலும் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. போடி டவுன் போலீசார் செல்வம், ஜமுனா ராணி இருவரையும் கைது செய்து 6.300 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ