உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டாஸ்மாக் மூடக்கோரி போடியில் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் மூடக்கோரி போடியில் ஆர்ப்பாட்டம்

போடி ; போடி காமராஜ் பஜார் நெடுஞ்சாலைத் துறை ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதனால் வர்த்தகம் பாதிப்பதோடு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மண்டல செயலாளர் பிரேம் சந்தர் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட ஜெயக்குமார், தொகுதி அமைப்பாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகிகள், வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ