மேலும் செய்திகள்
அதிகரிக்கும் பஸ் ஸ்டாப்களால் ஊழியர்களுடன் தகராறு
17-Dec-2024
தேனி மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட்டுகளில் பஸ்கள் நிறுத்த முடியாத அளவிற்கு தனிநபர்கள் ஆக்கிரமித்து டூவீலர்கள், கார்கள், வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ்களை உரிய இடத்தில் நிறுத்த வழியின்றி நடுரோட்டில் நிறுத்தி செல்கினறனர். இதனால் முதியோர், பெண்கள் உயரமான படிக்கட்டுகளில் ஏறி, இறங்க சிரமம் அடைகின்றனர். மேலும் பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பயணிகள் எந்த ஊருக்கு செல்லும் பஸ் எங்கே நிற்கிறது என அறிய முடியாமல் சிரமம் அடைகின்றனர். தனிநபர் வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்தவும், பயணிகளுக்கு வசதி செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17-Dec-2024