உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி

மகன் காதணி விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை பலி

தேவதானப்பட்டி : மகன் காதணி விழாவிற்கு உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை விஜயராகவன் டூவீலரிலிருந்து விழுந்து பலியானார்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கோட்டைப்பட்டி சாவடி தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன் 41. இவரது மனைவி ராஜபுஷ்பம் 37. மூன்று மகன்கள் உள்ளனர். 2 வது மகன் காதணி விழாவிற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க ஜெயமங்கலம் நோக்கி டூவீலரில் சென்றார். ஜெயமங்கலம் ஆண்டிபட்டி ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே நிலைதடுமாறி மார்ச் 9 இரவில் விழுந்தார். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இவர் நேற்று முன்தினம் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை