மனைவியை குத்திய கணவர் கைது
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் 55, இவரது மனைவி சத்யா 45, நேற்று முன்தினம் ஜெயபால் மனைவியிடம் வட்டிக்கு பணம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அசிங்கமாக பேசிய கணவர் ஜெயபால் கத்தியால் மனைவியை குத்தியதில் கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது. சத்யா புகாரில் போலீசார் ஜெயபாலை கைது செய்தனர்.