உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் பாசன நீர் திறப்பு

வைகை அணையில் பாசன நீர் திறப்பு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து 10 நாட்களுக்கு பின் மீண்டும் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிச., 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் வெளியேறுகிறது. முறைப்பாசன அடிப்படையில் அணையில் சில நாட்கள் நீர் திறந்து விட்டும் சில நாட்கள் நிறுத்தியும் வைக்கின்றனர். ஏப்.,2ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர், வினாடிக்கு 350 கன அடி வீதம் கால்வாய் வழியாக நேற்று காலை 6:00 மணிக்கு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 56.89 அடியாக இருந்தது (மொத்த அணை உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து இல்லை. மதுரை, தேனி,- ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் வழக்கம் போல் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ