உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்

தேனியில் இரு மகள்களுடன் தாய் மாயம்

தேனி : தேனி பள்ளிவாசல் தெரு ரஞ்சித்குமார் 36. இவரது மனைவி கார்த்திகைஜோதி 33. இத்தம்பதிக்கு மூன்று மகள்கள். கார்த்திகை ஜோதி உள்ளூரில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 4 காலையில் வெளியூர் சென்று வேலை செய்ய உள்ளேன் என கணவரிடம் கூறினார். இதற்கு கணவர் ரஞ்சித்குமார் மறுப்பு தெரிவித்தார். இதனால் மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு மனைவி வராமல் மூத்த மகளை வீட்டில் விட்டுவிட்டு, இளைய மகள்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். ஜூலை 4 முதல் தற்போது வரை மனைவி, குழந்தைகள் வீட்டிற்கு வராததால், பாதிக்கப்பட்ட கணவர் தேனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து தாய், 2 மகள்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ