உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு -மின் உற்பத்தி நிறுத்தம்

பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு -மின் உற்பத்தி நிறுத்தம்

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 105 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் தேனிமாவட்டம் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி122 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்ப் பிடிப்பில் மழை பதிவாகவில்லை.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 94 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 3033 மில்லியன் கன அடியாகும். கடந்த சில நாட்களாக அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.நீர்மட்டம் குறைந்து வருவதாலும், இரண்டாம் போக நெல் சாகுபடி முடிவுக்கு வந்த நிலையில் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 105 கன அடியாக குறைக்கப்பட்டது.லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு குறைந்த அளவு 200 கனஅடி தண்ணீர் தேவை.தற்போது நீர் திறப்பு 105 கன அடியாக குறைக்கப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.குடிநீருக்காக மட்டும் திறக்கப்பட்ட தண்ணீர் குமுளி மலைப்பாதையில் உள்ள இரைச்சல் பாலம் வழியாக தமிழகப் பகுதிக்கு வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை