வகுப்பறையில் துாங்கிய மாணவி மீட்பு
கம்பம் : கம்பத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி வந்த 9 ம் வகுப்பு மாணவி, வீட்டில் உடல் நலக்குறைவால் மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். வகுப்பறையில் தூங்கி விட்டார். ஆனால் சிறப்பு வகுப்பு நடைபெறவில்லை. இவர் மட்டும் வகுப்பறையில் தூங்கி உள்ளார். மாலை எழுந்த பார்த்த போது பள்ளி கதவு பூட்டப்பட்டிருந்ததை பார்த்து சத்தம் போட்டுள்ளார். உறவினர்களும், பொதுமக்களும் மாணவியை மீட்டு அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.