நோயாளர் உடன் வருவோர் தங்கும் கட்டடங்கள் வீண்
கம்பம் : தேனி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளர்கள் உடன் வருபவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடங்கள், பல ஆண்டுகளை கடந்தும் பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு, உடன் வருபவர்கள் தங்குவதற்கென மத்திய மாநில அரசுகள் பங்குத் தொகையில் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப நோயாளர் உடன் வருபவர்கள் தங்க புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது.மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டது. கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகளை கடந்து திறந்தும், பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நல்ல நிலையில் உள்ள கட்டடங்கள் செயல்படுவதில் என்ன பிரச்னை என தெரியவில்லை. நோயாளர் உடன் வருபவர்கள் தங்கவில்லை என்றாலும், வேறு பயன்பாட்டிற்காவது பயன்படுத்த இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.