மேலும் செய்திகள்
வனவிலங்குகள் நடமாட்டம் மூணாறு மக்கள் அச்சம்
18-Sep-2025
காட்டு யானைகள் நடமாட்டம் தொழிலாளர்கள் கலக்கம்
08-Sep-2025
மூணாறு: மூணாறு அருகே ரோட்டோரம் உள்ள நான்கு கடைகளை நள்ளிரவில் படையப்பா ஆண் காட்டு யானை சேதப்படுத்தியது. மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் மிகவும் பிரபலமான படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை, நயமக்காடு ஆகிய எஸ்டேட்களுக்கு இடையே நடமாடி வருகிறது. அந்த ரோட்டில் நேற்று முன்தினம் நடமாடிய படையப்பா நள்ளிரவு 12:30 மணிக்கு மூணாறில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பெரியவாரை எஸ்டேட் பகுதிக்கு வந்தது. அங்கு பாலம் அருகே ரோட்டோரம் உள்ள செந்தில், மணி, ரூபன், பவுலி ஆகியோரின் கடைகளை சேதப்படுத்தியதுடன் ரொட்டி, பன், மேகி உள்பட உணவு பொருட்களை தின்றது. தகவல் அறிந்து வந்த வனத்துறையின் யானை தடுப்பு பிரிவினர் படையப்பாவை அருகில் உள்ள காட்டிற்குள் விரட்டினர். இதே பகுதியில் செப்.15ல் இரண்டு கடைகளை காட்டுயானைகள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
18-Sep-2025
08-Sep-2025