உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் வார்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கம்பம் வார்டுகளில் ஆக்கிரமிப்பு அகற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கம்பம் : கம்பம் வார்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி முன்வர வேண்டும் என கவுன்சிலர்கள் பேசினர்.கம்பம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் அம்பிகா தலைமையில் நடந்தது. பில்டிங் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சுகாதார அலுவலர் ஜெயராமன் அதிகாரிகள் பங்கேற்றனர்.

விவாத விபரம்:

பாஸ்கரன் : பஸ் ஸ்டாண்டில் வசூல் பண்ணுவதற்கு ஏலம் விட வேண்டாம். நகராட்சி பணியாளர்களை பயன்படுத்தி வசூல் பண்ணலாம்.

அஜ்மல்கான் : நிர்வாகம் என்ன நினைக்கிறது. கவுன்சிலர்கள் மீது பொறுப்பை சுமத்த பார்க்கிறது.

அப்பாஸ்: தனியாரிடம் வசூல் பணியை விடலாம்.

வருவாய் ஆய்வர் : நகராட்சியில் பணியாளர்கள் இல்லை. தனியாரிடமும் விடமுடியாது. 51 ஆயிரம் வசூலாகிறது. ரூ. 38 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டுள்ளனர். ரூ. 15 ஆயிரம் குறைகிறது.

அப்பாஸ்: தனியார் பஸ்களில் கட்டணமாக ரூ. 50 வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பத்: எனது வார்டில் ரூ. 5 லட்சத்திற்கு பணிகள் செய்ய டெண்டர் விட்டும் பணிகள் துவக்கவில்லை.

தலைவர்: நகராட்சியில் பணம் இல்லை. எனவே நிதி ஒதுக்கீடு வந்தவுடன் பணிகள் துவக்கப்படும்.

வாசு : 27 வது வார்டில் உழவர் சந்தை அருகில் மட்டும் ஆண்டிற்கு 4 முறை ஆக்கிரமிப்புகள் அகற்ற என்ன காரணம்.

இன்ஸ்பெக்டர்: உழவர் சந்தை அருகில் ஆக்கிரமிப்பு இருப்பதால், கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அஜ்மல்கான்: ஓடைக்கரை தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற கூறுகிறேன். நடவடிக்கை எடுக்கவில்லை.

ஷாஜிதா: எனது வார்டில் ஆக்கிரமிப்பு அகற்ற ஓராண்டாக கூறி வருகிறேன். நடவடிக்கை இல்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி