உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலன் நகரில் சீரமைப்பு பணி முடித்த பின் தார்ரோடு அமைக்க வி.சி., மனு

பாலன் நகரில் சீரமைப்பு பணி முடித்த பின் தார்ரோடு அமைக்க வி.சி., மனு

தேனி: தேனி நகராட்சி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்த வி.சி.,நகர துணைச்செயலாளர் வெற்றிச் செல்வன். நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில், 'இந்நகராட்சி 3வது வார்டு பாலன் நகர் ரோட்டை பாலன் நகர், ஒண்டிவீரன் காலனி, கக்கன்ஜி காலனி மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் தார்சாலை ரோடு அமைக்கும் பணி நடை பெற உள்ளது. சாக்கடை,சேதமடைந்த பாதாள சாக்கடை செல்லும் குழாய் பகுதிகளை சீரமைத்த பின் முறையாக கழிவுநீரோடை, பாதாள சாக்கடையை அமைத்து பின் தார்ரோடு அமைக்க வேண்டும்', என தெரிவித்துள்ளனர். வி.சி., மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆபிரகாம், மாவட்ட துணை அமைப்பாளர் வீரப்பிச்சை ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை