பீடி இலை கடத்திய வீரருக்கு காப்பு
திருநெல்வேலி:இலங்கைக்கு கடத்த இருந்த, பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று அதிகாலை 3:00க்கு, கூடங்குளம் கலங்கரை விளக்கம் அருகே மினிலாரியை சோதனையிட்டபோது, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 3 டன் பீடி இலை பண்டல்கள் இருந்தன. வள்ளியூர், தளபதி சமுத்திரத்தை சேர்ந்த டிரைவர் இசக்கியப்பன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர். இசக்கியப்பன், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.