உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பயங்கரவாத ஒழிப்பு பேரணி வள்ளியூரில் காங்.,வரவேற்பு

பயங்கரவாத ஒழிப்பு பேரணி வள்ளியூரில் காங்.,வரவேற்பு

வள்ளியூர் : வள்ளியூரில் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினருக்கு காங்., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக மக்கள் சார்பாக சுமார் 25 லட்சம் பேரிடம் பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழியினை பெற்றிடவும், பயங்கரவாத ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பயங்கரவாத ஒழிப்பு முகாம் மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கருடா இளைஞர் நலப்பாசறை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் தொடங்கியது பிரசார வாகன பேரணி வள்ளியூருக்கு வந்தபோது காங்., முன்னாள் மாவட்ட செயலாளர் சிவசாமிநாதன் சார்பில் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் நகர வர்த்தக காங்., செயலாளர் சீராக் இசக்கியப்பன், நான்குநேரி வட்டார காங்., விவசாய பிரிவு தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை