உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சென்ட்ரல் - ஆவடி தடத்தில் 4 மின்சார ரயில்கள் ரத்து

சென்ட்ரல் - ஆவடி தடத்தில் 4 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - ஆவடி தடத்தில் நான்கு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆவடி ரயில்வே யார்டில் வரும் 21ம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலை 3:30 மணி வரை, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.சென்ட்ரல் - ஆவடி இரவு 11:40 மணி ரயில் இன்று ரத்துசெய்யப்படுகிறதுபட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இரவு 11:50 மணி ரயில் இன்று ரத்துசெய்யப்படுகிறதுசென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் நாளை ரத்துசெய்யப்படுகிறதுஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் அதிகாலை 3:00 மணி ரயில் நாளை ரத்துசெய்யப்படுகிறது.ஒரு பகுதி ரத்து சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:40 மணி ரயில் இன்று ஆவடி வரை மட்டுமேஇயக்கப்படும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில், இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் நாளை அதிகாலை 3:30 மணி ரயில், ஆவடியில் இருந்துஇயக்கப்படும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை