| ADDED : ஜூலை 31, 2024 05:38 AM
சென்னை : ஆவடி ரயில்வே பணிமனையில், நாளை நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என, சென்னை ரயில்வே கோட்டம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.l பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இன்று இரவு 11:50, சென்ட்ரல் - ஆவடி இன்று இரவு 11:40 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றனl சென்ட்ரல் - ஆவடி இன்று நள்ளிரவு 12:15 மணி, ஆவடி - பட்டாபிராம் அதிகாலை 3:00 மணி ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது ஒரு பகுதி ரத்து
l சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:40, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில்கள் இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்l பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் அதிகாலை 3:30 மணி ரயில் நாளை ஆவடியில் இருந்து இயக்கப்படும்l சென்ட்ரல் - அரக்கோணம் காலை 9:10, காலை 11:00, சென்ட்ரல் -திருத்தணி காலை 10:00 ரயில்கள் இன்று திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும் l அரக்கோணம் - சென்ட்ரல் காலை 11:15, நண்பகல் 12:00 மணி ரயில்கள் இன்று திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் l திருத்தணி - சென்ட்ரல் நண்பகல் 12:35 மணி ரயில் திருவள்ளூரில் இருந்து இன்று இயக்கப்படும் l வேலுார் கன்டோன்மென்ட் - அரக்கோணம் காலை 10:00 மணி ரயில் இன்று சித்தேரி வரை மட்டுமே இயக்கப்படும்l சென்ட்ரல் - திருப்பதி காலை 9:50 மணி ரயில் இன்று திருத்தணியில் இருந்து இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.