மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
13 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
13 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
14 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
14 hour(s) ago
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 120க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. தவிர, வேண்டுதலுக்காக சிலர் கோவிலில் திருமணம் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று மலைக்கோவிலில் 40 திருமணங்களும், தனியார் திருமண மண்டபங்களில் 45 திருமணங்களும் நடந்தன.திருமண வரவேற்பு மற்றும் முகூர்த்தத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர், திருத்தணி மலைக்கோவிலில் குவிந்தனர்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், கூட்டம் அதிகம் இருந்தது.இதனால் மலைக்கோவிலில் பொதுவழி தரிசனத்தில், பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.கோவிலுக்கு வந்த பக்தர்கள், திருமணத்திற்கு வந்தவர்களின் வாகனங்களால் திருத்தணி நகரம், சித்துார் சாலை, கமலா தியேட்டர் ஆகிய இடங்களிலிருந்து ம.பொ.சி., சாலை, அரக்கோணம் சாலை, முருகன் கோவில் மலைப்பாதை ஆகிய பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago