உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு கல்லுாரியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு அழைப்பு இல்லாததால் காங்., எம்.எல்.ஏ., போராட்டம்

அரசு கல்லுாரியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு அழைப்பு இல்லாததால் காங்., எம்.எல்.ஏ., போராட்டம்

பொன்னேரி: பொன்னேரி அரசு கலைக்கல்லுாரியில் 4,000த்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.மாணவர்களின் வசதிக்காக காமராஜர் துறைமுகத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், 5.25 கோடி ரூபாயில், புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்தன.தரை, முதல் மற்றும் இரண்டாவது என மூன்று தளங்களில், 18,480 சதுர அடியில், 15 வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.இதன் திறப்பு விழா நேற்று, காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஐரீன் சிந்தியா தலைமையில் நடந்தது. காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனீல் பாலிவால், புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.கல்லுாரி கட்டட திறப்பு விழாவிற்கு எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என்பதால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், திறப்பு விழாவிற்கு வந்த துறைமுக தலைவரின் வாகனத்தை நிறுத்தி, பொன்னேரி காங்.,- எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர், தொண்டர்களுடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.தொடர்ந்து எம்.எல்.ஏ., மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியபடி இருந்ததால், துறைமுக தலைவர் சுனீல் பாலிவால் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு நடத்தி, வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் துறைமுக தலைவர் மற்றும் அதிகாரிகள் கட்டட திறப்பு விழாவிற்கு வந்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து துறைமுக நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியதால், துறைமுக அதிகாரிகள் புதிய கட்டடங்களை திறந்து வைத்து மேடை நிகழ்ச்சிக்கு வராமல் பாதியில் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ