உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கத்திப்பாரா மேம்பாலத்தில் கிரிக்கெட் வீரர் தற்கொலை

கத்திப்பாரா மேம்பாலத்தில் கிரிக்கெட் வீரர் தற்கொலை

ஆலந்துார் : கத்திப்பாரா மேம்பாலத்தில், 50 அடி உயரத்தில் இருந்து குதித்து எம்.பி.ஏ., பட்டதாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.சென்னை, ஆலந்துார், கத்திப்பாரா மேம்பாலத்தில், கிண்டி, -ஈக்காடுதாங்கலில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வாலிபர் நேற்று சென்று கொண்டிருந்தார். திடீரென வாகனத்தை கத்திப்பாரா மேம்பாலத்தின் சுவர் ஓரம் நிறுத்தினார்.பின், மேம்பாலத்தின் மேல் ஏறி, 50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், அவரின் கைகள் உடைந்து, நெற்றியில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல் கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட வாலிபர் விருகம்பாக்கம், சி.ஆர்.ஆர்., புரம், எல் அண்டு டி காலனியை சேர்ந்த சாமுவேல்ராஜ்,23, என தெரியவந்தது. காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.பி.ஏ., முடித்த இவர், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார்.வீட்டில் இருந்து கிரிக்கெட் பயிற்சிக்கு புறப்பட்டு செல்லும்போது, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் அணிக்கு தேர்வாகாததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ