மேலும் செய்திகள்
விஷ வண்டு கடித்து முதியவர் உயிரிழப்பு
19-Aug-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 71. ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், நேற்று முன்தினம் காலை என்.ஜி.ஓ., காலனி சிவாஜி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தவரை அருகிலிருந்தோர் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Aug-2024