உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பறிமுதல் வாகனங்கள் ஜூலை 9, 10ல் ஏலம்

பறிமுதல் வாகனங்கள் ஜூலை 9, 10ல் ஏலம்

திருவள்ளூர்:காவல் துறையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஜூலை 9, 10ல் பொது ஏலம் விடப்படுகிறது.திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண் காணிப்பாளர் கோ.அரி குமார் விடுத்துள்ளசெய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு, பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 182 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. வரும் ஜூலை 9, மற்றும் 10ம் தேதி காலை 10:00 மணியளவில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானம் அருகே வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.வாகனங்களை ஏலம் கேட்க வருவோர் முன் வைப்பு கட்டணத் தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு 1,000, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 செலுத்த வேண்டும். அதற்கான வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனடியாக செலுத்த வேண்டும்.வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ