உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசை பெருமாள் கோவில் ஆனிபிரம்மோற்சவம் துவக்கம்

திருமழிசை பெருமாள் கோவில் ஆனிபிரம்மோற்சவம் துவக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில்.இங்கு இந்த ஆண்டு ஆனிப்பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை 7:25 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடந்தது. பிரம்மோற்சவ திருநாளில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வரும் 19ம் தேதி காலையிலும், தேர்த்திருவிழா வரும் 23ம் தேதி காலை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்