உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை அ.தி.மு.க., பிரமுகரால் சலசலப்பு

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை அ.தி.மு.க., பிரமுகரால் சலசலப்பு

வியாசர்பாடி:வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த விஜய் என்பவர், நேற்று காலை ஓட்டு போட சென்றார்.அப்போது, அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாகவும், தாமரைக்கு ஓட்டு விழுந்ததாகவும் கூறி, அங்கு இருந்த கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, அ.தி.மு.க., பிரமுகர்கள், ஓட்டுசாவடியில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி, ஓட்டுப்பதிவு இயந்திர பொறியாளர் இயந்திரத்தை சரிபார்த்தனர். அப்போது, எந்த பிழையும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது. பின், அ.தி.மு.க., பிரமுகர் விஜய் தகவல்களை மாற்றி மாற்றி பேசினார்.விஜய் வேண்டுமென்று புரளி கிளப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் நிலையம் அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். உடனே, 25க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர்.

'வதந்தி கிளப்பிய அ.தி.மு.க.,'

சம்பவ இடத்தில் பா.ஜ., வேட்பாளர் பால்கனராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் கூறியதாவது:வடசென்னையில் லோக்சபா தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளது. எம்.கே.பி.நகர், 37 வது வட்டம், 150வது ஓட்டுசாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும், தாமரைக்கு ஓட்டு விழுவதாக புகார் எழுந்தது. ஆனால், ஓட்டு இயந்திரத்தில் எந்த கோளாறும் ஏற்படவில்லை. அ.தி.மு.க., பிரமுகர் விஜய் என்பவர் வேண்டுமென்று புரளி கிளப்பி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி