உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரி செலுத்தாத தொழிற்சாலைக்கு நோட்டீஸ்

வரி செலுத்தாத தொழிற்சாலைக்கு நோட்டீஸ்

உத்திரமேரூர்: கிராமங்களில் தனியார் தொழிற்சாலை இயங்கும் பட்சத்தில், வரி வசூல் ஊராட்சியின் வருவாய் ஆதாரத்தை பெருக்க வழிவகுக்கிறது. உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதிபட்டிணம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கும் தொழிற்சாலை இயங்குகிறது.இத்தொழிற்சாலையில், 2023- - 24ம் ஆண்டுக்கான சொத்து வரி 13 லட்சம் ரூபாய் செலுத்தாமல் இழுத்தடிப்பு செய்து வருவதாகவும், இதுகுறித்து அத்தொழிற்சாலை நிறுவனத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:அமராவதிபட்டணம் கிராமத்தில் செயல்படும் தொழிற்சாலைக்கான 2023- - 24ம் ஆண்டுக்கான சொத்து வரி, 13 லட்சம் ரூபாய் இதுவரை செலுத்தப்படவில்லை.இதுகுறித்து வரி கேட்பு நோட்டீஸ், தொழிற்சாலைக்கு நேரில் அளித்தும், சொத்து வரி செலுத்த முன்வரவில்லை. எனவே, இனியும் காலம் தாழ்த்தும்பட்சத்தில் அடுத்த கட்ட ஜப்தி உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை