உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருக்கண்டலம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருக்கண்டலம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் கிராமத்தில், 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்று திருக்கண்டலம், அத்தங்கிகாவனுார், கிளாம்பாக்கம், மாம்பள்ளம், அழிஞ்சிவாக்கம், குருவாயல், பெருமுடிவாக்கம், பூரிவாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.இதில் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்