உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் குறைதீர் கூட்டம் 596 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 596 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 596 மனுக்கள் ஏற்கப்பட்டன.திருவள்ளூரில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.இதில், நிலம் சம்பந்தமாக 194, சமூக பாதுகாப்பு திட்டம் 81, வேலைவாய்ப்பு வேண்டி 94, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 70, இதர துறை 147 என, மொத்தம், 596 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது, உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், தனித் துணை கலெக்டர் செல்வமதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி