உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கலெக்டர் உத்தரவு

மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அளவிலான மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் சிகிச்சை, உள் நோயாளிகள் சிகிச்சை, அறுவை சிகிச்சை, முட நீக்கியல் அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை குறித்து நன்கு கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனைகளில், 'எக்ஸ்-ரே' நுண்கதிர் சேவை, 'அல்ட்ராசொனோகிராம்' சேவை மற்றும் ஆய்வக சேவையினை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ சேவைகளை குறைவின்றி வழங்க வேண்டும். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை உரிய முறையில் வழங்க வேண்டும். மகப்பேறு, மகளிர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகளை சிறப்பு கவனம் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ