உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னாங்குளத்தில் நீர்த்தேக்க தொட்டி சேதம்

பொன்னாங்குளத்தில் நீர்த்தேக்க தொட்டி சேதம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பொன்னாங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதிவாசிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக, 2002 -- 03ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.ஆழ்குழாய் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு, பின் குழாய் வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தற்போது, சேதமடைந்து காணப்படுகிறது.சிமென்ட் காரைகள் பெயர்ந்து, உள்ளிருக்கும் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து வருகிறது. மேலும், குழாய் மற்றும் வால்வு சேதடைந்து, தண்ணீர் வீணாகிறது.எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை