உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கற்கள் பெயர்ந்த சாலையால் கடும் அவதி

கற்கள் பெயர்ந்த சாலையால் கடும் அவதி

மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகரில் உள்ள பல்வேறு தெருக்கள் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.இதனால், பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர், ஜல்லி கற்களால் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், அவசர மருத்துவ தேவைக்கு செல்ல கூட கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் வெங்கத்துார் ஊராட்சியில் ஆய்வு செய்து, கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி