உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதருக்குள் மாயமாகும் சாலை திருப்பந்தியூர் பகுதிவாசிகள் அவதி

புதருக்குள் மாயமாகும் சாலை திருப்பந்தியூர் பகுதிவாசிகள் அவதி

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி.இந்த ஊராட்சிக்குட்பட்ட பண்ணுார் பகுதியிலிருந்து திருப்பந்தியூர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி பகுதிவாசிகள் திருப்பந்தியூர், திருமணிக்குப்பம், வடமங்கலம் சென்று வருகின்றனர். இந்த சாலை கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ஒன்றிய சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து சாலை புதருக்குள் மாயமாகி வருகிறது.இதுகுறித்து பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திருப்பந்தியூர் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருப்பந்தியூர் ஊராட்சியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ