உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேம்பாலம் கீழ் வாகன பார்க்கிங் சிப்காட்டில் போக்குவரத்து நெரிசல்

மேம்பாலம் கீழ் வாகன பார்க்கிங் சிப்காட்டில் போக்குவரத்து நெரிசல்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன.சிப்காட் முகப்பில் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் உள்ளது. அதன் கீழ், வாகனங்கள் கடந்து செல்லும் பகுதியில், ஏராளமான உணவகங்கள் இயங்கி வருகின்றன.உணவகங்களுக்கு வரும் வாகனங்கள், அப்படியே மேம்பாலத்தின் கீழ், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.குறிப்பாக, பரபரப்பான காலை மற்றும் மாலை நேரத்தில், இதுபோன்று ஏற்படும் போக்குவரத்து பாதிப்பால், தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.எனவே, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அப்பகுதியில் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். விதிமீறி நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி