அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையநடைமேம்பாலம் அருகே நேற்று காலை, 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து நிலையில் கிடந்தார். இதைக் கண்ட பயணியர் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, விசாரிக்கின்றனர்.