உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்டட கழிவுகளால் நிரம்பி வழியும் விளையாட்டு மைதானம்

கட்டட கழிவுகளால் நிரம்பி வழியும் விளையாட்டு மைதானம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்டது சின்னகளக்காட்டூர் கிராமம். இங்கு சிற்றேரி எதிரே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு மைதானம், 2013-- 14ம் ஆண்டு ஒன்றிய நிதி வாயிலாக அமைக்கப்பட்டது.இந்த விளையாட்டு மைதானத்தை இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் மற்றும் இளைஞர்கள் விளையாட பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஓராண்டாக இந்த விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்தாத நிலையில் தற்போது துருப்பிடித்தும் மைதானத்தில் செடி முளைத்து புதராக காட்சியளிக்கிறது.மேலும் கட்டடக்கழிவுகள் கொட்டப்பட்டு மைதானம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர் -- சிறுமியர் விளையாட இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் சிறுவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுகிறது.எனவே விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்துள்ள செடிகள், கட்டட கழிவுகளை அகற்றி சீரமைக்க திருவாலங்காடு ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை