தொழில் பழகுனர் பயிற்சி முகாம்
திருவள்ளூர், :திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும், 15ம் தேதி தொழில் பழகுநர் பயிற்சி முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் 15ம் தேதி தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு 'பிரதமர் அப்ரன்டிசிப் மேலா' நடைபெற உள்ளது. இதில், மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் பங்கேற்க உள்ளன.முகாமில் ஐ.டி.ஐ., தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற் பழகுனர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் 'நாக்' சான்றிதழ் பெற்று பயனடையலாம். இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ, gmail.comஎன்ற இமெயில் மற்றும் 94990 55663, 87784 52515, 94441 39373 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.